எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Wednesday 20 April 2011

ஐயகோ தமிழா!


இதோ இன்னும் நான்கு உயிர்கள். கண்டனங்கள். வழக்கமான பொய்பூச்சு வாக்குறுதிகள் …….. அறிக்கைகள்……….கடிதங்கள்….. தந்திகள்…. எதையும் கானும். அதான் தேர்தல்தான் முடிஞ்சு போச்சே. இந்த பரதேசிங்கள பத்தி யாருக்கு கவலை? அய்யாவுக்கு தேர்தல் கமிஷன் சாக்கு. அம்மாவுக்கு எந்த சாக்கும் தேவையில்லை. யாருக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயமும் இல்லை. யாரையும் கேள்வி கேட்க தமிழனுக்கு நாதியும் இல்லை. மீண்டும் அதே உச்…….அதே மறதிகள். இவையெல்லாம் அந்த ஐநூத்தி சொச்சம் குடும்பங்களை தவிர்த்த ஆறு கோடி தமிழர்களுக்கு பழகிப்போனவை. ஆனால் அந்த குடும்பங்களுக்கு? அவர்களின் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த குடும்பங்களின் வாழ்க்கை என்ன ஆகும்? நமது வீட்டில் நமது தம்பிக்கோ அண்ணனுக்கோ மாமனுக்கோ மச்சானுக்கோ நடந்துவிட்டால் நாம் இப்படியா இருப்போம். மற்றவர்கள் இப்படி இருந்தால்தான் நாம் தாங்கிக்கொள்வோமா?


அப்படி என்ன தவறு இழைத்தார்கள் இவர்கள்? தமிழனாக இந்தியாவில் பிறந்தது ஒன்றுதான் பெருந்தவறாகப்படுகிறது. மயிரு போனதற்கே உசிரு போனமாதிரி துடித்தவர்கள் ஒன்றா இரண்டா  ஐநூத்தி சொச்சம் உசிரு போனபிறகும் மசிரே போச்சுன்னு இருப்பதை என்னவென்று சொல்வது? ஆசையினால் தாண்டி போகிறார்கள் என்று அய்யாவே சொல்லிட்டார். எந்த ஆசையினால்? சிங்களவன் கையால உயிர் போகனும் என்ற ஆசையினாலா? எவனாவது தற்கொலை பண்ணிக்க விரும்பி மீன் பிடிக்க போவானா ஐயா? எல்லாம் அந்த அய்யாவுக்கே வெளிச்சம்!


ஒரு அமெரிக்கனோ பிரச்சுகாரனோ பாதிக்கப்பட்டா அவன் தனது நாட்டை சேர்ந்தவனான்னு பார்க்கறதுதான் அந்த நாட்டு அரசுகளுக்கு வழக்கம். ஆனால் ஒரு இந்தியன் பாதிக்கப்பட்டா அவன் மலையாளியா இந்திக்காரனா அப்படின்னு பார்க்கற வழக்கம் இந்திய அரசுக்கு மட்டும்தான் இருக்குது. பாதிக்கப்பட்டவன் மலையாளியாவோ இந்திக்காரனாவோ இருந்தா அது அமரிக்காவா இருந்தாலும் ஆஸ்திரேலியாவா இருந்தாலும் பாய்ந்து போவார் வெளியுறவு அமைச்சர். சீக்கியனின் மசுர வெட்டினா உசிர குடுத்து கத்துவாறு பிரதமர். ஆனா தமிழனை வீடு தேடிவந்து அடிச்சாலும் கொன்னாலும் கேக்குறதுக்கு நாதியில்லை. அதுமட்டுமில்லை அடிச்சவனுக்கு விருந்தும் இரத்தின கம்பள வரவேற்பும் பூரணகும்ப மரியாதையும்! அடேங்கப்பா எப்பேர் பட்ட நாட்டுல பொறந்திருக்கோம்? 

இந்தியனா அதுவும் ஒரு தமிழனா இந்தியாவுல பொறந்ததுக்கு வெட்கப்படுறேன்! வேதனைப்படுகிறேன்!

பட உதவி : வினவு.காம். நன்றி தோழர்களே!

Thursday 17 March 2011

காலம் தரும் வாய்ப்பு!


நினைத்தது நடந்தே விட்டது. ஜெயலலிதாவின் தமிழின விரோத கோர முகம் வெளியில் வந்துவிட்டது. திமுக காங்கிரசு குமிடிப்பிடி சண்டையின் முடிவுக்கு ஜெயலலிதா காத்திருந்த போதே பலருக்கு சந்தேகம் வலுத்தது. கம்யூனிஸ்ட்டுகளையும் மதிமுகவையும் காக்கவைத்த போதே வேதாளம் முருங்கை மரம் ஏறுவது புரிந்த்து. நேற்று இரவு அது சந்திக்கு வந்துவிட்டது. ஜெயலலிதா போன்றவர்களுக்கெல்லாம் இது கூடவே பிறந்த சாபம். அவர்கள் ஒரு போதும் நன்றி நினைப்பதில்லை. அவர்கள் வந்த வர்க்கம் அப்படி. ஆதிக்க வர்க்கம். உழைப்பவனின் ரத்தத்தை உறிஞ்சியே வாழம் வர்க்கம். நம்பியவனின் கழுத்தை அறுத்தே பழக்கம். நாமக்கூட அட மாறிட்டாங்களோன்னு கொஞ்ஞ்ஞ்ஞ்சசசம்..... ( நெசமாலுமே கொஞ்சம்தான்) நினைச்சோம். வழக்கம்போல வேதாளம் தன் புத்தியை காட்டிவிட்டது.

19 மாதம் உள்ளே போட்ட பிறகும் வைகோவுக்கு விளங்கவில்லை. எஸ்மா டெஸ்மான்னு போட்டபிறகும் தோழர்களுக்கு உரைக்கவில்லை. விஜயகாந்திற்கு வேறு வழியில்லை. தமிழினத்திற்கும்தான். இது அம்மாவின் தலையை இன்னும் இறுக்கிவிட்டது.

விஜயகாந்திற்கு 41 கொடுத்தவர் வைகோவுக்கு ஒரு 15 கொடுப்பதில் என்ன பெரிய சிரமம். அங்கேதான் அவருக்கு நெருடல். நாளைக்கே ஆட்சிக்கு வந்தால் ஈழம் தமிழன் என்று கத்தி கத்தியே இந்த ஆள் தலைவலியை கூட்டிவிடுவான். காங்கிரசோடு கைகோர்த்து தமிழன் கழுத்தை நெறிக்க முடியாதே. தான் ஆட்சிக்கு வந்தால் பேசுகின்றவன் எதிக்கட்சியாய் இருக்கக்கூடாது. இது எல்லாம் தலையில் முடியில்லாதவனின் யோசனையாய் இருக்கும் அம்மாவுக்கு.

வைகோ செய்த உறுப்படியான காரியம் இதுவரை வாயை திறக்காததே. காலம் இப்போதும் தகர்ந்து போகவில்லை. அது தமிழனுக்கு இன்னொரு பொன்னான வாய்ப்பை வழங்க காத்திருக்கிறது. விஜய காந்திற்கும் ஒதுக்கீட்டில் ஒன்னும் பிரகாசம் இல்லை. கம்யூனிஸ்ட்களுக்கும் அப்படியே. வைகோவுக்கு இல்லவே இல்லை (மானமாவது மிஞ்சியது). இப்போதாவது இவர்கள் கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும். இவர்கள் சேர்ந்தால் தமிழின விரோதிகள் இல்லாத கூட்டணியாக அது இருக்கும். விஜயகாந்தும் கம்யூனிஸ்ட்டுகளும் ஈழம் விசயத்தில் பாரட்டப்படக்கூடியவர்கள் இல்லைதான். ஆனால் அவர்களிடத்தில் மனிதாபிமானவது இருக்கும். ஜெயலலிதாவையே பொறுத்துக்கொண்ட நமக்கு இவர்களை ஏற்றுக்கொள்வது ஒன்றும் பெரிய விடயமில்லை. ஈழ மக்கள் ஆதரவுக்கு இன உணர்வு தேவையில்லை மனிதாபிமானம் இருந்தால் போதும்.

நிதிகளிடம் சிக்கிக்கொண்டிருக்கும் சினிமா உலகத்திற்கும் கேப்டன் ஒரு நல்ல மாற்றுத்தேர்வு. ஜெவிடமும் கருணாநிதியிடமும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இது ஒரு மாற்றைத்தரும். நடுநிலையாளர்களுக்கும் இது நல்ல வாய்ப்பைத் தரும். ஆட்சியை பிடிக்க முடியுமா என்பது பதில் சொல்ல சிரம்மான கேள்வி என்றாலும், இப்போது இருக்கும் நிலையிலிருந்து ஒரு படியாவது உயர்ந்த இடத்துக்கு இவர்களை இது இட்டுச்செல்லும். யார் கண்டார்? மக்கள் ஆட்சியையே கொடுக்கலாம். வெண்ணை திரண்டு வருகிறது. தாழியை போட்டு உடைக்காமல் இருந்தால் சரி!
பட உதவி : வினவு.காம். நன்றி தோழர்களுக்கு!
.

Sunday 6 February 2011

கேக்குறவன் கேணையனா இருந்தா............!


கடந்த சில மாதங்களாக எங்கும் ஸ்பெக்ட்ரம் எதிலும் ஸ்பெக்ட்ரம். இந்த பிரச்சினையை அலசாத சந்துபொந்துகள் இல்லை. இவைகளில் டீக்கடை பென்ச் பாணி அலசல்கள்தான் அதிகம். அதிலும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடின்னா எத்தனை சுழியம் போடனும்? ராசாவுக்கும் தேன்மொழிக்கும் இதுவாமே? அந்தம்மா ராடியா நம்ம ரத்தன் டாட்டாகிட்ட ஏதோ கோடுவேர்டுலலாம் பேசிச்சாமே? போன்ற நவரச கேள்விகள்தான் அதிகம். என்ன பன்னுறது எல்லாத்திலும் நமக்கு ஒரு கிக் தேவைப்படுது. சாதாரண மக்களாவது பரவாயில்லை. தன்னை பெரிய அறிவு ஜீவிகள்னு காட்டிக்கிற கூட்டம் பிடிச்சிகிட்டு தொங்கற விழயம் அதவிட காமெடி. அவங்களுக்கு தலைமை கணக்காயர் கொடுத்திருக்கிற 1,76,000 கோடி இழப்பு என்கிற கணக்கு லாஜிக்கா இல்லையாம். அவர் சொல்ற கணக்குப்படியான பங்குகளின் மதிப்பு எல்லாம் காகிதத்தில்தான் உள்ளதாம். பங்குகளை விற்று வீட்டுக்குள்ள நோட்டை அடிக்கி வைத்தால்தான் அது உண்மையான் மதிப்பு என்கிறார்கள். அப்படியென்றால் நாம் அவ்வப்போது உலக பணக்காரார்கள் வரிசைகள் பத்தி பேசறமே? அவங்கள்ளாம் பணத்தை நோட்டா அடுக்கி வங்கியிலா வச்சிறுக்காங்க? எல்லாம் அவர்களின் நிறுவன பங்குகளின் மதிப்பை கணக்கிட்டுத்தானே சொல்லப்படுது. அப்போது மட்டும் வாயை பொளந்துகிட்டு பார்க்கிறாங்க. அப்பவெல்லாம் இந்த அறிவு ஜீவித்தனம் எங்க போச்சுன்னு தெரியல. அதைவிட பெரிய கொடுமை தெரியுமா? இந்த உலக பணக்காரங்களுக்கெல்லாம் இருக்கிற சொத்து மதிப்ப விட வங்கிகளுக்கு இவங்க கொடுக்கவேண்டிய கடன்தான் அதிகம். சரி அதையெல்லாம் விடுங்க! 


இது எல்லாவிற்றையும்விட மிகக் கொடுமையான விஷயம் இந்த கருணாநிதியும் மன்மோகன்சிங்கும் சோனியாகாந்தியும் விடுகின்ற அறிக்கைகள். மலைமுழுங்கி மகாதேவன்கள் போல இவ்வளவு பணத்தையும் ஆட்டய போட்டதும் இல்லாம மக்களை வடிகட்டின முட்டாள்களாக நினைக்கின்ற இவர்களின் போக்குதான் நம் ரத்தத்தை கொதிக்கவைக்கிறது. கருணாநிதியின் அறிக்கைகளைப் பாருங்கள்.

இராசா இந்தத் (தொலைத் தொடர்புத்) துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செய்த குற்றம் என்ன என்று பார்த்தால், ஏழை. எளிய மக்களுக்கும் சேல்போனை கொண்டு சென்றதுதான்
”ராஜாவை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.   வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன்”

கேக்குறவன் கேணையா இருந்தா எருமைக்கூட ஏரோப்பிளைன் ஓட்டுமாம். இப்படித்தான் இருக்கிறது கருணாநிதியின் அண்மைக்கால அறிக்கைகளை படிக்கும்போது.
ஒரு வாதத்திற்காவது கருணாநிதி சொல்வது போன்று இராசா குற்றமற்றவர் என்றே வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் இராசாவை கைது செய்வதை இவரால் ஏன் தடுக்கமுடியவில்லை? இராசாவை கைது செய்தது யார்? அமெரிக்காவின் புலனாய்வு பிரிவா? அல்லது பாகிஸ்தானின் புலனாய்வு பிரிவா? நீங்கள் பங்கேற்று ஆட்சிபுரியும் மத்திய அரசின் அங்கமான மத்திய புலனாய்வு பிரிவுதானே? அதுவும் நேற்று வழக்கு போட்டு இன்று கைது செய்தார்களா? இரண்டு ஆண்டுகால விசாரணைக்குப்பின் நீதிமன்றம் சாட்டையை சுழற்றியபின்தானே கைது செய்தார்கள்? உங்கள் கூற்றுப்படி நிரபராதியான ஒரு முன்னாள் அமைச்சரையே அநீதியிலிருந்து ஆட்சியாளர்களாகிய உங்களால் காக்கமுடியவில்லையென்றால் இந்த நிலையிலிருக்கும் அப்பாவி மக்களுக்கு என்ன கதி? அப்பழுக்கற்ற உங்கள் கட்சி அமைச்சரின்மீது நடவடிக்கை எடுப்பதை வேடிக்கை பார்க்கும் பிரதமரை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை? அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியுடன் ஏன் உறவை ஏன் முறித்துக்கொள்ளவில்லை? மீண்டும் கூட்டணிக்காக அவர்கள் காலில் ஏன் போய் விழுகிறீர்கள்? மன்மோகன் அரசு பதவியேற்றபோது உங்களுக்கு அமைச்சரவையில் வேண்டிய இடங்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக டெல்லியை முடக்கிப்போட்ட நீங்கள் இப்போது ஏன் அதை செய்யவில்லை? 

இந்த மாதிரியான முட்டாள்தனமான அறிக்கைகளால் கருணாநிதி யாரையெல்லாம் கேவலப்படுத்துகிறார் தெரியுமா?
- மிகப்பெரிய இந்திய நாட்டின் அடிப்படை ஜனநாயகத்தையும் அதன் அடிப்படை சட்ட திட்டங்களையும்
- மத்திய புலனாய்வு துறையையும் அதன் செயல்பாடுகளையும்
- இந்த பிரச்சினையை விவாதித்த நாடாளுமன்றத்தையும் அதன் உறுப்பினர்களையும்
- கொஞ்சமாவது மனசாட்சியுடன் செயல்படும் பத்திரிக்கையாளர்களை
- இன்றும் ஜனநாயகத்திற்கு உயிர் இருக்கினறது மக்களை உணரவைத்துக்கொண்டிருக்கும் நீதிமன்றங்களையும் அதன் செயல்பாடுகளையும்
- இவற்றிற்கெல்லாம் மேலாக இவர்களை ஓட்டுப் போட்டு தெர்ந்தெடுத்த மக்களை

என்னை கேட்டால் இவரது அறிக்கைகளை வைத்தே இவர்மீது வழக்கு தொடர்ந்து இவரையும் உள்ளே தள்ளவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் இன்னும் கொஞ்சநஞ்சம் நீதி உயிர்ப்போடு உள்ளதாக அர்த்தம்.

‘‘நல்ல நிர்வாகத்தின் ஆணி வேரையே ஊழல் தாக்குகிறது’’
”நாட்டின் புகழை கெடுப்பதாக ஊழல் உள்ளது”
”சர்வதேச அளவில் நமது நாட்டின் புகழை கெடுப்பதாக ஊழல் உள்ளது”

இவைகள் ஏதோ என்னைப் போன்ற கையகலாத பிளாக்கர்கள் எழுதிய வரிகள் இல்லை. சாட்சாத் இந்திய திருநாட்டை கட்டி ஆளும் அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு பிரதமரின் வார்த்தைகள். ஊழல்வாதிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்துக்கொண்டு, ஊழல்வாதிகளை அமைச்சர்களாக ஆக்கிகொண்டு, ஊழலுக்கு அமைச்சரவையை கூட்டி அனுமதி வழங்கிவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இரண்டு ஆண்டுகளாகியும் திட்டமிட்டு ஊழல்வாதிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவிக்கும்வரை ஊழல் வழக்கில் சிபிஐய்யின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு மன்மோகன்சிங் இன்று இவ்வாறு விசனப்படுவது எந்த விதத்தில் நியாயம். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கவேண்டிய தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே ஊழலுக்கு உறுதுணையாக இருந்துவிட்டு இப்போது வெட்டியாக மேடையில் முழங்குவது வெட்கக்கேடானது.  

மன்மோகன்சிங்கை விமர்சித்தால் பலருக்கும் கோபம் வருகிறது. அவரை மிஸ்டர் கிளின் என்கிறார்கள். ஆரம்பத்தில் அவரை ஏகத்துக்கும் விமர்சித்த சுப்பிரமணியம்சாமி கூட இப்போது அடக்கி வாசிக்கிறார். ஆனால் என்னை கேட்டால் கருணாநிதியைவிட சோனியாகாந்தியைவிட அதிக விமர்சனத்திற்குரியவர் மன்மோகன்சிங்தான். ஊழல்வாதிகளைவிட மோசமானவர்கள் அவர்களை அடைக்காக்கும் மன்மோகன்சிங் போன்ற மிஸ்டர் கிளின் பிம்பம் கொண்டவர்கள்தான். இவரைப்போன்றவர்களின் பொய்பிம்பங்களுக்குப் பின்னால்தான் சோனியாகாந்தி போன்ற ஊழல்பெருச்சாளிகள் ஓடி மறைந்துகொள்கின்றன. மன்மோகன்சிங் உண்மையில் உண்மையானவர் என்றால் நீதிமன்றம் தலையிடும் முன்னரே இந்த பிரச்சினையில் அவர் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். அப்படி அவர் நடவடிக்கை எடுப்பதை தலைமை தடுக்கும் பட்சத்தில் தனது பதவியை உதறி இருக்கவேண்டும். ஊழல் பெருச்சாளிகளை மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கவேண்டும். அதையெல்லாம் செய்யாமல் வெட்டியாக மேடைகளில் முழங்கி சுயபச்சாதாபம் தேடிக்கொள்வது வெட்கக்கேடானது. வேடிக்கையானது.