எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Monday 31 August 2009

மௌனத்தின் பயங்கரம்!

தமிழர்களின் இன்றைய மவுனம் என்னை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. நான் இங்கே தமிழர்கள் என்று விளிப்பது நம் தாய் தமிழகத்தின் ஆறுகோடி மக்களைத்தான். அவர்களை ஆளும் அல்லது ஆண்ட அரசியல்வாதிகளை அல்ல. இத்தகையோரின் மௌனத்தையோ எழுச்சியையோ நாம் பொருட்படுத்தவேக் கூடாது என்பது கடந்தகாலம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம். ஆனால் உலகத்திலேயே மிகுந்த குடும்ப பிணைப்பும் மனிதமும் கொண்ட நம் தமிழினம் இப்படி உணர்ச்சியற்ற கட்டைகளாக மாறிப்போனதை நினைத்து உண்மையில் பெரும் அச்சமாக உள்ளது. போனவாரம் சேனல் 4 ஒரு கானொளிப்பதிவை வெளியிட்டார்கள். இளகிய மனது படைத்தோர் கானக்கூட அஞ்சக்கூடிய ஒரு பதிவு அது. இலங்கை முகாமிலிருந்த கடத்தி செல்லப்படும் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்து, நிர்வாணமாக்கி, மைதானமொன்றில் கண்களையும், கைகளையும் கட்டிவிட்டு இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்லும் கொடூரக்காட்சி இது. காண்போரை கலங்கவைக்கும் இந்த கானொளிப்பதிவை கண்ட அன்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை. இத்தகைய காட்டுமிராண்டித்தனம் ஏதோ பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நிகழவில்லை. தமிழகத்திலிருந்து ஒரு சில மைல் தொலைவிலேயே நிகழ்ந்துள்ளது. ஆனால் பெருவாரியான தமிழக மக்களிடமிருந்தோ அல்லது ஊடகங்களிடமிருந்தோ இது குறித்த கண்டனமோ எதிர்ப்போ கானப்படவில்லை. சாருக்கான் அமரிக்காவில் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்ட நிகழ்வையும் அதனால் சல்மான்கான் அமரிக்க பயணத்தை கைவிட்டதையும் தலைப்பு செய்திகளில் வெளியிட்டு தன் நாட்டுப்பற்றை பறைச்சாற்றிக்கொண்ட நமது தமிழக ஊடகங்கள் இந்நிகழ்வை கண்டுகொள்ளவே இல்லை. இந்த ஒரு நிகழ்வு குறித்து மாத்திரமல்ல மே மாதம் 18 ம் தேதிக்கு சற்று முன்பும் அதற்கு பிறகும் வன்னிப்பகுதியிலே சிங்கள படையினரால் அறங்கேற்றப்பட்ட கொடுமையான நிகழ்வுகள் குறித்தும் யாரும் இன்றுவரை வாய்திறக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று லட்சம் தமிழ் மக்கள் ஒரு சிறு நிலப்பரப்பில் மின்சார வேலிகளுக்கிடையில் மூன்றுமாத காலமாக அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிற நிகழப்போகிற பயங்கரம் குறித்து அச்சப்பட்டு ஈனக்குரலில் அவர்கள் எழுப்பும் குரல் நம் காதுகளை எட்டாதது வியப்பை தருகிறது. இது குறித்து சிறிய பிரஞ்ஞையே யாருக்கும் இல்லாதது ஏன் என்று தெரியவில்லை. இப்படி நிகழ்வது முதல்தடவையல்ல. எண்பதுகளில் தமிழீழத்தில் போராட்டம் வெடித்தது முதல் இன்று வரை சிங்களர்கள் இது போன்ற பல அட்டூழியங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளை ஒடுக்குகிறோம் என்று சொல்லி இலங்கை பேரினவாத அரசு ஒரு திட்டமிட்ட இன அழிப்பை செய்கிறது அதற்கு என் காந்தி கண்ட தேசம் துணை போகக்கூடாது என்று கத்தினோம் கதறினோம். ஆனால் காந்தி பேரைச்சொல்லியே ஐம்பது வருடமாய் இந்தியாவை கொள்ளையடிக்கும் கும்பலின் காதுகளில் எங்கள் குரல் விழவில்லை. அதே போல அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் தமிழக கட்சிகளின் காதுகளிலும் அது விழவில்லை. ஆனால் மனசாட்சியுள்ள நம் தமிழக மக்களும் அவர்கள் கொடுத்த இலவசங்களால் செவிடாகிப்போனதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. தேர்தலில்தான் இப்படி என்றால் தேர்தலுக்குப்பிறகும் தன் சொந்த இனம் இப்படி அநியமாக அழிக்கப்படுவதை நம் தமிழகம் கண்டும் கானாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று கொண்டாடி மகிழ்ந்தவர்கள் இன்னும் ஏன் தமிழர்களை இப்படி கொட்டடியில் அடைத்து வைக்கவேண்டும். ஐம்பது சதவீத ஈழத்தமிழினம் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளோரையும் வாழத்தகுதியற்ற நடைப்பினமாக மாற்றவேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள். இதற்கு தெரிந்தோ தெரியாமலோ தாய் தமிழர்களாகிய நாம் உதவியாக இருக்கிறோம் என்பதை ஏன் தமிழக மக்கள் உணர மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை. நமக்கும் நாளை இப்படி ஒரு நிலை வராது என்பது என்ன நிச்சயம்? தன்னை மனித குல காப்பாளர்களாக காட்டிக்கொள்லும் உலக நாடுகள் மற்றும் ஐக்கியநாடுகள்சபை போன்ற சர்வதேச அமைப்புகள் எல்லாம் அதிகார வர்க்கத்தின் எடுபிடிகள்தான் என்பதை இலங்கை விவகாரத்தில் அவர்களின் நடவடிக்கைகள் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டன. இந்த அமைப்புகள் போடும் சட்டதிட்டமெல்லாம் ஏழை நாடுகளை அதிகார நாடுகள் ஒடுக்கி வைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மை இப்போது தெளிவாகி இருக்கிறது. காந்தி கண்ட தேசமென்றும் அகிம்சையை உலகத்துக்கு போதித்தவர்கள் என்றும் வேசம் போடும் போலி கதர்சட்டைகளின் கோரமுகம் இன்று வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் நமது சொந்த தமிழினம் காட்டும் இந்த மௌனத்தின் பயங்கரம்தான் எனக்கு புரியவில்லை. ஒரு வேளை வடக்கத்தியர்கள் புரிந்து கொண்ட அளவிற்கு நாம் நம்மினத்தை புரிந்து கொள்ளவில்லையோ? .

Wednesday 19 August 2009

எச்1என்1 நோய் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள எளிய வழிகள்!

எச்1என்1 காய்ச்சல் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள டெல்லி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழக மருத்துவர் ஒருவர் அறியத்தந்துள்ள எளிய வழி முறைகள் கீழே தரப்பட்டுள்ளன. அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். இப்போது பரவலாக பலரும் முக கவசம் அணிவதால் மட்டும் இத்தொற்றை தவிர்க்கலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் இப்போது நடப்பிலுள்ள பச்சை மற்றும் நீல நிற முக கவசங்களால் இக்கிருமிகளை தடுத்துவிட முடியாது. ஏனெனில் இத்தகைய கவசங்கள் 0.3µ அளவுள்ள கிருமிகளை மட்டுமே தடுக்க முடியும். அதுவும் 95% கிருமிகள் மட்டுமே தடுக்க முடியும். ஆனால் எச்1என்1 கிருமியோ 0.1µ அளவே உள்ளது. ஆகவே முகமூடிகளை கொண்டு இக்கிருமிகளை தடுத்து நிறுத்த நினைப்பது கொசுவலையைக்கொண்டு மழையை தடுப்பது போலாகும். இதனால் முகமூடிகளுடன் சேர்த்து மற்ற வழிமுறைகளையும் கடைபிடிப்பது அவசியமாகிறது. வீட்டில் உபயோகப்படுத்தும் வெள்ளை நிற கைக்குட்டைகளையே முகமூடிகளாக உபயோகப்படுத்துவது இன்னும் சிறந்தது. எச்1என்1 காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் தாமிபுலு மாத்திரைகள் கூட இந்த கிருமிகளை அழிப்பதில்லை. அவை மேலும் பல்கி பெருகுவதைத்தான் தடை செய்கின்றன. இவ்வாறு அவைகள் பல்கி பெருகுவதை தடை செய்வதால் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் (இரு வாரங்கள்) இந்த கிருமிகள் தாமாக ஆயுள் முடிந்து அழிந்துவிடுகின்றன. ஆகவே இக்கிருமிகளை அறவே தவிர்ப்பதற்கு தடுப்பூசிகள் ஒன்றே வழி. ஆனால் தடுப்பூசிகள் புழக்கத்தில் வரும்வரை உரிய வழிமுறைகளை கொண்டு நம்மை காத்துக்கொள்வது அவசியம். 1. கைகளை அடிக்கடி நல்ல சோப்பு கொண்டு கழுவுங்கள். 2. பொது இடங்களுக்கோ அல்லது வெளியில் செல்லும் போதோ அவசியமில்லாமல் கைகளை உபயோகித்து இடங்களை தொட வேண்டாம். 3. கைகளை முகத்தருகே கொண்டு செல்வதை அடியோடு தவிர்க்க வேண்டும். அப்படியே கொண்டு சென்றால் நன்கு கை கழுவிய பிறகே கொண்டு செல்ல வேண்டும். 4. ஒவ்வொரு முறை வெளியே சென்று வரும்போது கைகளை நன்கு கழுவிவிட்டு வரவும். 5. உப்பு கலந்த சுடு தண்ணீரில் குறைந்தது நாளுக்கு இருமுறை வாய் கொப்பளிக்கலாம். உப்பு தண்ணீரை நம்பாதவர்கள் லிஸ்டரின் உபயோகிக்கலாம். எச்1என்1 தொற்று ஏற்படும்போது கிருமியானது நாசி மற்றும் தொண்டைப்பகுதிகளில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தங்கி இருந்து பல்கிப்பெருகும். அதன் பின் தான் முழுமையான நோய் அறிகுறிகள் தோன்றும். இவ்வாறு உப்புத்தண்ணீரில் வாய்க்கொப்பளிக்கும்போது இக்கிருமிகள் பல்கிப்பெருகுவது தடுக்கப்படும். இதனால் நோய் தாக்கியவரின் உடலில் தாமிபுலு மருந்துகள் செய்யும் வேலையை ஆரோக்கியமானவரின் உடம்பில் இந்த உப்புத்தண்ணீர் செய்கிறது. ஆகவே உப்புத்தண்ணீரில் வாய்க்கொப்பளிப்பதை சாதாரணமாக எண்ணவேண்டாம். 6. இதேபோல உப்பு கலந்த சுடு தண்ணீரில் குறைந்தது நாளுக்கு ஒரு முறையாவது நாசிகளை சுத்தப்படுத்தலாம். 7. ஜல நேத்தி வகை யோகாசனம் தெரிந்தவர்கள் அவற்றை செய்து நாசிகளை சுத்தப்படுத்திக்கொள்ளலாம். அல்லது நாளுக்கு இருமுறை அழுத்தி மூக்குகளை சிந்தியபிறகு உப்பு கலந்த சுடு தண்ணீரில் நனைத்த பஞ்சினால் நாசிகளை சுத்தப்படுத்தலாம். இது கிருமி எண்ணிக்கைகளை வெகுவாக குறைக்கும். 8. வைட்டமின் சி செறிந்த பழங்களையும் உணவுகளையும் அதிக அளவில் உண்டு இயற்கையான எதிர்ப்பு சக்தியை உடலில் ஏற்படுத்தலாம். வைட்டமின் சி மாத்திரைகளை நேரடியாக எடுத்துக்கொள்பர்கள் அதில் சிங்க் கலந்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும் 9. மேலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுடு தண்ணீரை குடிப்பது நல்லது. இது உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதற்கு ஈடான பலனைத்தரும். சுடு நீரைக்குடிக்கும்போது தொற்றுக்கிருமிகள் தொண்டையிலிருந்து வயிற்றுக்கு அடித்துகொண்டு போகப்படுகின்றன. இரைப்பையில் இக்கிருமிகள் வளரமுடியாததால் மாண்டுபோகின்றன. மருத்துவமனைகளில் சென்று அவதிப்படுவதைவிட வீட்டிலேயே இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி நோய்த்தொற்றை தவிர்க்கலாம். மேலும் இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதாலும் சாம்பிராணி போன்ற நறுமணப்பொருட்களை உபயோகிப்பதாலும் இந்த நோய்த்தொற்றை தவிக்க முடியும் என்று பண்டிட் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் கூறியுள்ளார்.

Friday 14 August 2009

நல்ல உள்ளங்களே உதவுங்கள்!

படத்தில் இருக்கும் நண்பர் திரு செந்தில்நாதன் அவர்கள் சிங்கையில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவருக்கு இருதயத்தில் ஏற்ப்பட்டபாதிப்பால் இருதய மாற்று அறுவை சிகிழ்ச்சைக்காக சிங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதற்கு மிகப்பெரியத்தொகை செலவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்காக அவரது மனைவி சகோதரி சாந்தி அவர்களும் நண்பர்களும் நல்ல உள்ளம் கொண்ட அனைவரின் உதவியையும் பிரார்த்தனைகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இது குறித்த அவரது நண்பர் திரு கே வி ராசா அவர்களின் பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதைக்காணும் அன்பர்கள் அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யவேண்டும் என்று வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். திரு கே.வி.ராசா அவர்களின் பதிவு பின்வருமாறு, சக பதிவர் திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது. ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். ICICI Account Details Account Number: 612801076559 Name: M.KARUNANITHI Branch: Tanjore Singapore Account Details Account Number: 130-42549-6 Name: Muthaiyan Karunanithi Bank: DBS - POSB Savings பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன். மேலதிக விபரம் வேண்டுபவர்கள் குசும்பனையோ(சரவணன்) அல்லது நண்பர் கருணாநிதியையோ தொடர்புகொள்ளலாம். அமீரகத்தில் ஒருங்கிணைப்பவர்கள் ஆசிப் மீரான் (அண்ணாச்சி) + 97150 6550245 குசும்பன்செல்பேசி எண்: +97150 2664131 சிங்கப்பூரில் ஒருங்கிணைப்பவர்கள் கருணாநிதி செல்பேசி எண்: +65 93856261 சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன். Hi Friends, This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment. Thanks Regards, Santhi Senthil Nathan.