எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Tuesday 21 October 2008

அடுத்த ஜனாதிபதி ஷாருக்கானா?!

இந்தோனேசியாவில் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லை. குறிப்பாக இந்தியர்களை அசத்தும் விடயங்கள் அதிகமாகவே உண்டு. அவைகளில் சிலவற்றை வரும் பதிவுகளில் காண்போம். இந்தோனேசியாவின் மிகப்பிரபலமான இந்தியர் யார் என்றால் இங்கு வந்த இந்தியர்கள் அனைவரும் எளிதில் சொல்லிவிடுவார்கள். அவர் யாரும் இல்லை. நம் ஷாருக்கான் தான். தாம் முதல் முறையாக சந்திக்கும் இந்தியரை இந்நாட்டவர் கேட்கும் முதல் கேள்வி உங்களுக்கு ஷாருக்கானை தெரியுமா என்பதுதான். அவர் பெயரை சொல்லும்போதெ வெட்கப்படும் இந்நாட்டு பெண்களை கண்டால் எனக்கு சிரிப்புத்தான் வரும். அவர் நடித்த பல படங்கள் இங்கே மிகவும் பிரசித்தம். குச் குச் ஹோத்தஹை திரைப்படப்பாடல்களை என்னுடன் பணிபுரியும் தோழிகள் அடி பிறழாமல் பாடுவதைக்கண்டு மலைத்துப் போய்விட்டேன். இங்கு தொலைக்காட்சிகளில் அதிகம் இடம்பெறுபவை குரல் மாற்றம் செய்யப்பட்ட இந்தி சினிமா படங்கள் தான். அதே போல் திரைப்பட் தயாரிப்பிலும் வட இந்தியர்கள் அதிக ஈடுபட்டுள்ளார்கள். இதில் என் நன்பர் ஒருவர் சொன்ன செய்தி மிகக்கொடுமையானது. சென்ற முறை ஷாருக்கான் ஜகார்த்தாவில் நடத்திய சிறப்பு நிகழ்ச்சியின் கட்டணத்துக்காக என் நண்பரின் வீட்டு வேலைப்பெண் இரண்டு மாத சம்பளத்தை முன்பணமாக கேட்டாராம். முடியாது என்றதுக்கு வேலையைவிட்டு நின்றுவிடுதாக சொல்லிவிட்டாராம் அந்தப்பெண். நன்பர் வேறு வழியின்றி அதை கொடுத்து தொலைத்தாராம்! ஷாருக்கான் இங்கு ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டால் வெற்றி உறுதி! இதை நான் சொல்லவில்லை. உள்ளூர் நன்பரே சொல்கிறார். வாழ்க இந்தோனேசிய மக்கள். இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதி திரு சுகர்னோ ஆவார். இவர் நம் அன்புக்குரிய தலைவர் ஜவஹர்லால் நேருவின் மிக நெருங்கிய நன்பர். திரு சுகர்னோ அவர்களின் ஆத்ம குரு யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை வீர்த்துறவி சுவாமி விவேகானந்தர் தான். சுவாமி விவேகானந்தரின் படத்தை எப்போதும் தன் அறையிலே மாட்டியிருப்பாராம் இவர். பஞ்சசீலக் கொள்கை என்றதும் இந்தியர்கள் நினைவுக்கு வருவது திரு நேரு அவர்கள் 1956ல் சீனாவுடன் செய்து கொண்ட பஞ்சசீல உடன்படிக்கையாகும். ஆனால் இந்தோனேசிய ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடும் பஞ்சசீலக் கோட்பாடு (“Dasar Negara Pancasila” ) என்றே அழைக்கப்படுகிறது. இது ஜனாதிபதி திரு சுகர்னோ அவர்களாலேயே கொண்டுவரப்பட்டதாகும். உண்மையில் இது சமஸ்கிருத வார்த்தையாகும். இறைவன் ஒருவனே, ஒன்றுபட்ட இந்தோனேசியா, அனைவருக்கும் ஒரே சமூக நீதி போன்ற ஐந்து கோட்பாடுகளைக்கொண்டதே இந்த பஞ்சசீலக்கொள்கை. இந்தோனேசியா ஒரு இசுலாமிய தேசம் என்று பிரகனப்படுத்தப்பட்டுள்ள போதும் மற்ற மதங்களும் சம நிலையுடன் மதிக்கப்படுகின்றன. இந்துக்கள், கிருத்துவர்கள் மற்றும் பவுத்தர்களுக்கான முக்கிய பண்டிகை நாட்கள் தேசிய விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய இந்துக்களுக்கு ராமாயண மகாபாரதக் கதைகள் தெரியுமோ இல்லையோ இந்நாட்டில் உள்ள இசுலாமியருக்கும் இக்கதைகள் அத்துப்படி.. ஏன் என்றால் அது அவர்களின் ஆரம்ப பள்ளி பாடத்திட்டங்களில் சொல்லிகொடுக்கப்படுகிறது. ஜகார்த்தாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள அர்ச்சுனன் ரதச்சிற்பம் இந்நாட்டின் கலைத்திறனுக்கும் மத சகிப்புத்தன்மைக்கும் ஒரு முகிகிய சான்று ஆகும்! (தொடரும்)

6 comments:

ஆட்காட்டி said...

சுகார்ட்டோ ரொம்ப நல்லவரோ? நேருவுக்கு கூட்டாளியா இருந்திருக்கிறாரு.

Dr. சாரதி said...

நல்ல பதிவு....தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்!

தமிழ் நாடன் said...

வருகைக்கு நன்றி ஆட்காட்டி அவர்களே!

தமிழ் நாடன் said...

உற்சாகப்படுத்தியதற்கு நன்றி திரு.டாக்டர் சாரதி.

நசரேயன் said...

நல்ல பதிவு .. அருமையான தகவல்கள்

தமிழ் நாடன் said...

நன்றி திரு ஏசுவடியான் செல்லப்பன்!