
மார்பகப்புற்று நோய் பெண்களுக்கு மட்டும்தான் வரும் என்பது தவறு. 1:100 என்ற விகிதத்தில் ஆண்களுக்கும் இது வருகிறது என்பதுதான் புதிய செய்தி.
வருடந்தோறும் அக்டோபர் மாதம் மார்பகப்புற்று நோய் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பெண்கள் மட்டுமல்ல குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவை என்பதே இப்பதிவின் நோக்கம். சென்ற நூற்றாண்டுகளில் மேற்க்கத்திய நாடுகளில் மட்டுமே பெண்கள் இந்த நோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது ஆசிய நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவில் பெண்கள் இந்த நோய் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மேற்க்கத்திய கலாச்சார கழிசடைகளை கூச்சமின்றி நாம் ஏற்றுக்கொண்டதுதான் இதற்கும் காரணம்.
இந்த நோய் வருவதற்கான காரணங்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. உலகமெங்கும் இதற்கான ஆராச்சிகள் நடைப்பெற்று வருகின்றன. ஆனால் நோய் பாதிப்புகளுக்கான வாய்ப்புகள் பற்றி மட்டுமே இதுவரை அறியப்பட்டிருக்கிறது. இந்நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டால் இந்நோயை கட்டுப்படுத்தி வாழமுடியும். இவற்றைப்பற்றி வலையுலகில் சிறப்பான தகவல்கள் உள்ளன். கீழே உள்ள சுட்டிகளை சுட்டினால் இவற்றை அறியலாம். ஆகவே அவற்றை பற்றி இங்கே நான் அதிகம் விவரிக்கவிரும்பவில்லை
தமிழில்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4843
http://reallogic.org/thenthuli/?p=238
ஆங்கிலத்தில்
http://en.wikipedia.org/wiki/Breast_cancer
http://ww5.komen.org/breastcancer/aboutbreastcancer.html
இது பெண்கள் சம்பந்தப்பட்ட நோய் என்பதாக அனேக ஆண்கள் இந்த நோயைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் ஆண்கள் மட்டுமல்ல குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த நோயைப்பற்றி அறிந்துகொள்வது மிகவும் அவசியம். பெரும்பாலான் நம் தாய்மார்கள் திருமணமானவுடன் தமது முழுக்கவனத்தையும் தமது குடும்பத்தை பராமதிப்பதிலேயே செலவிடுகிறார்கள். கணவண் மற்றும் குழந்தைகளின் உடல்நிலை மீது செலுத்தும் அக்கறையை தன்னுடைய உடல் நலத்தின் மீது அவர்கள் செலுத்துவதில்லை. அபபடியே ஏதாவது நோய் வந்தாலும் கைமருந்தோ அல்லது கடையிலிருந்தோ மருந்து வாங்கி சாப்பிட்டு காலத்தை ஓட்டிவிடுவார்கள். ஆனால் இதுபோன்ற நோய்கள் இவர்களை தாக்கி கடைசி கந்தாயத்தில் தெரிய வரும்போது இவர்களுடன் சேர்ந்து இவர்கள் பேணிக்காத்த குடும்பத்தின் நிலையும் பரிதாபமாகிவிடுகிறது. ஆகவே இத்தகைய தாய்மார்களின் உடல் நலத்தில் கவணம் செலுத்த வேண்டியது கணவன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவரின் கடமை ஆகும். நாற்பது வயதிற்கு மேற்ப்பட்ட அனைத்து பெண்களையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்நோயிக்கான சோதனைகளை மேற்கொள்ள செய்யவேண்டும். தம் குடும்ப மருத்துவரை கண்டு சுய பரிசோதனை முறைகளை அறிந்துகொள்ள அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். நோய் தாக்கத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து முறையான சிகிச்சை அளித்து அவர்களை காக்கவேண்டும். மேலும் மனரீதியாக அவர்களுக்கு மிகவும் அதரவாக இருந்தால் இந்நோயுடனேயே பல ஆண்டுகள் இயல்பாக வாழ முடியும்.
மேலும் இந்நோயைப்பற்றி நாளும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நீண்ட நாள்கள் தாய்பபால் புகட்டும் தாய்மார்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தகவல்கள் தெறிவிக்கின்றன. தற்போது பெண்கள் மட்டுமன்றி ஆண்களையும் இந்த நோய் தாக்குவதாக சொல்கிறார்கள். 1:100 என்ற விகிதத்தில் இந்நோய் ஆண்களையும் தாக்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் வியர்வை கட்டுபடுத்திகள் ( ஆண்ட்டி பெரிஸ்பெரண்ஸ்) உபயோகிப்பதும் இந்நோயிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாயின. நம்மூரில் குளித்தவுடன் அக்குளில் வாரிவாரிப்பூசும் டால்கம் பவுடர் என்னும் வாசனைப்பொடிகளும் இவற்றில் அடக்கம். இவற்றில் உள்ள பல வேதிப்பொருள்கள் நம் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் நம் வியர்வை வழியே வெளியேறுவதை தடுத்துவிடுவதாக இச்செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் இது தவறு என்று சாதிக்கின்றன. இது எந்த ஆராய்ச்சிகளாலும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று இவர்கள் வாதிடுகிறார்கள். எது எப்படியோ நாம்தான் எச்சரிக்கயாக இருக்க வேண்டும்.
நம் இல்லத்து தாய்மார்களை இந்நோயிலிருந்து காக்க வேண்டும். மறந்துவிடாதீர்கள் “பெண்கள் நமது வீட்டுக் கண்கள்”.
1 comment:
Would alcohol/gel based deodorants instigate the cancer growth?
Post a Comment