எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Saturday 3 October 2009

ஆறு அது ஆழமில்லஅது! சேரும் கடலும் ஆழமில்ல!

சூரிய வெளிச்சம் சுள்ளென்று முகத்தில் அடிக்க கடினப்பட்டு கண்களை திறந்தான் பீட்டர். இரவு உள்ளே போன அந்நிய அரக்கன் இன்னும் இறங்கவில்லை போலும், தலை வின்னென்று வலித்தது. நான்சி என்ன சொல்லப்போகிறாளோ என்ற கவலை வேறு தலைவலியை கூட்டியது. ”இதெல்லாம் மட்டையாகிற அளவுக்கு குடிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கனும்” மனசாட்சி சொன்னது. சரி நடக்கிறது நடக்கட்டும் என்று நினைத்தவாறு சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்து உட்கார்ந்தான். அறை சுத்தமாய் இருந்தது. மேசையை பார்த்தான். இரவு உடுத்தியிருந்த உடைகள் துவைக்கப்பட்டு இஸ்திரி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகள். ஒரு டம்ளரில் தண்ணீர். ஒன்றும் புரியாதவனாய் முதலில் தலைவலியாவது போகட்டும் என்று மாத்திரைகளை எடுக்கப்போனான். பக்கத்திலேயே ஒரு காகிதத்தில் சிறு குறிப்பு இருந்தது. பதறிப்போய் அதை எடுத்தான். படிக்க படிக்க கண்கள் விரிந்தன. “ ஹனி! வீட்டுக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டியிருக்கிறது. அதனால் காலையிலே ஷாப்பிங் போகிறேன். டைனிங் டேபிளில் டிபன் வைத்திருக்கிறேன். சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கவும். சீக்கிரம் வந்துவிடுவேன். இப்படிக்கு நான்சி” அதிர்ச்சியானவனாய் தன்னை கிள்ளி பார்க்கிறான். ஆமாம் நிஜம்தான். இதில் ஏதோ உள்குத்து இருக்குமோ என்று ஐயப்பட்டவாறே எழுந்து அறையை விட்டு வெளியே வருகிறான். வீடு பளிச்சென்று இருக்கிறது. சாப்பாட்டு மேசையில் இருக்கும் பாத்திரத்தை திறந்து பார்க்கிறான். உள்ளே சுடச்சுட இட்லி. பக்கத்தில் சாம்பாரும் கட்டி சட்னி வேறு. ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம். அந்தப் பக்கம் சோபாவில் சாப்பிட்டுக்கொண்டே பாட்டு பார்த்துக்கொண்டிருக்கிறான் ஜான். பீட்டரின் ஒரே மகன். இவனை பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டான். சங்கடப்பட்டவனாய் “ஜான் என்ன நடக்குது இங்க? ஒன்னுமே புரிய மாட்டேங்குது. நேத்திக்கு நைட் என்ன ஆச்சு?” என்றான் பீட்டர் ஒன்றும் தெரியாதவன்போல். “நேத்தைக்கு நீங்க தண்ணி அடிச்சிட்டு நைட்டு மூனு மணிக்குதான் வீட்டுக்கு வந்தீங்க, வந்த வேகத்தில் நாளஞ்சு தட்ட வேற ஒடச்சீங்க. நிதானம் தெரியாம கதவுல முட்டி அப்படியே விழுந்துட்டீங்க. பாவம் அம்மாதான் எல்லாத்தையும் கிளின் பண்ணாங்க. உங்களையும் கஷ்டப்பட்டு கட்டிலில் தூக்கிப்போய் போட்டாங்க” என்றான் ஜான் கோபமாய். ”ஐயையோ அப்படியா?” என்றவன் அதெல்லாம் சரி இந்த கூத்துக்கு நான்சி என்னை ஒரு மாசத்துக்கு பட்டினி இல்ல போட்டிருப்பா? அதெப்படி சூடா இட்லி கட்டி சட்னி இதெல்லாம்? குழம்பியவாறே மெதுவாய் குளியல் அறைக்கு சென்றான். நேற்று இரவு நான்சி இவனது சட்டையை கழட்ட முயன்றபோது ”அய்யோ என்னை தனியா விடுங்கம்மா. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு!” என்று திரும்ப திரும்ப உளறியது பீட்டருக்கு தெரிந்திருக்க நியாமில்லை. ”ஆறு அது ஆழமில்ல….. அது சேரும் கடலும் ஆழமில்ல… ஆழம் இது ஐயா ………………………………… இசையருவியில் பாடிக்கொண்டிருந்தார் இளையராஜா.
------------------------------------------------------------------
டிஸ்கி : இது நம்ப சொந்த சரக்கு இல்லை. மின்னஞ்சலில் நண்பர் கமல கிருஷ்ணன் ஆங்கிலத்தில் அனுப்பியதை இங்கு தமிழாக்கி தந்திருக்கிறேன் சிறிய மாறுதல்களோடு. நன்றி அவருக்கு! .

7 comments:

PonKarthik said...

Hi nice one buddy i Like this..

தமிழ் நாடன் said...

நன்றி கார்த்திக்!

தமிழ் நாடன் said...

எல்லாம் ஒரு வெளம்பரம்தான் தம்பி!தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ! வேற எதுக்கு யாராவது கும்முன்னா உன்னையும் சேர்த்து இல்ல கும்முவாங்க!

Anonymous said...

எமது www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்வையிடவும்.
பிடித்திருந்தால் பின்தொடருங்கள்

புலவன் புலிகேசி said...

அருமை.

ஊடகன் said...

வாழ்த்துக்கள் நண்பரே........!
தொடருங்கள் உங்கள் பணியை........!

தமிழ் நாடன் said...

மிக்க நன்றி ஊடகன்!