எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Friday 20 November 2009

வணக்கம் தலிவரே!

நேத்து பேப்பர்ல நம்ம தமிழின தலிவரு மவுனமா அழுதுகிட்டே ஒரு அறிக்க கொடுத்திருந்தாரு. அத படிச்சதிலிருந்து நானும் மவுனமா அழுவவேண்டியதா போச்சுங்க. அவர நினைச்சு இல்லீங்க. நம்ம தமிழனோட தலையெழுத்த நினைச்சு. வெளியில தலைய காட்டவே முடியல. கூட்டாளிங்க எல்லா கன்னா பின்னான்னு சவுண்டு வேற வுடரானுவ. அதனால நம்ம தலிவருக்கெல்லம் கொஞ்சம் அடவைஸ் குடுக்கலாமுன்னு இருக்கேன். ஈழப்பிரச்சினைப் பத்தி நம்ம தலிவருங்க இனிமேல வாயத்தொறக்கமா இருக்கறதுதான் நல்லதுன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா இவங்கெல்லாம் அதப்பத்தி பேசி இனிமே நடக்கப்போறது ஒன்றும் இல்லை. இவங்க வாய பொத்திகினு இருந்தாலாவது குத்துயிரும் குல உயிருமா இருக்கிறவன் நிம்மதியாக செத்தாவது தொலைவான். இவங்களால டெல்லிக்காரனோட பீச்சாங்கை சுண்டு விரல கூட அசைக்க முடியாதுங்கறதுதான் உண்மை. சும்மா பிராண்டுனா இவங்க மெயின் பீசையே அவன் புடுங்கிடுவான். அதுமட்டுமில்ல டெல்லிக்காரன் பாச்சா எல்லாம் சிங்களன் கிட்ட இனிமே பலிக்காது. அவன் இங்கிஷ்காரனையே பீஸ் கட்டி டெரரிஸ்ட ஒடுக்கறத பத்தி அவங்கிட்ட பாடம் படிச்சிட்டுப் போன்னு சொல்லிகிட்டு இருக்கான். அப்ப நம்ம டர்பண் தலைக்கெல்லாம் என்ன நிலைமைன்னு நீங்களே புரிஞ்சுக்குங்க. அமெரிக்கா காரன் கிட்ட பல்லை இளிச்சிகிட்டு காலம் ஓட்டவேண்டிய நெலம டெல்லிக்காரனுக்கு. அமெரிக்காகாரன் என்னடான்னா சீனாக்காரன் கிட்ட பல்லைக் காட்டிக் காலத்தை ஓட்டிகிட்டி இருக்கான். இனிமே சீனாக்காரன் வைச்சதுதான் சட்டம். பாதி தமிழ்க்காரங்க இந்தியாவுல இருக்கறதால சீனாக்காரனும் நமக்கு ஹெல்ப் பண்ண மாட்டான். அதேப்போல நம்ம தமிழக சனங்களுக்கும் ஈழ்ப்பிரச்சினையில் பெருசா ஒன்னும் இண்டரஸ்ட் இல்லை. இதை நான் சொல்லலீங்க. போன எம்பி எலக்‌ஷன்லயே நாம இத நம்ம ரெண்டு கண்ணாலேயே பாத்துட்டோம். தமிழ் நாட்டுல அரசியல் பன்றதுக்கு ஈழப்பிரச்சினை மாதிரி ரிஸ்க்கான பிரச்சினையெல்லாம் இனிமே தேவையே இல்லை. ஒரு நாலாயிரங் கோடி பணமும் நாலு டெலிவிஷன் சேனல்களும் நாலு இலவச திட்டங்களும் இருந்தாலே போதும். இப்பல்லாம் இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமே இல்லை. தம்மாத்தூண்டு ஸ்டேட்டுக்கு ரெண்டு வருசம் சிஎம்மா இருந்தவனுக்கெல்லாம் சொந்தமா கப்பலுங்கரான் ப்ளைட்டுங்கறான். இவ்ளோ பெரிய ஸ்டேட்டுக்கு அஞ்சு முறை சிஎம்மா இருந்தவங்களுக்கெல்லாம் இதெல்லாம் கால் தூசு. அதுமட்டுமில்ல நம்ப ராசா மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் ஒரே பால்ல ஒரு லட்சம் கோடி ரன்னெல்லாம் அடிக்கத்தெரியும். இதெல்லாம் டெல்லிக்காரனுக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் அலட்டிக்க வேணாமய்யான்னு தலப்பாட அடிச்சிகிட்டான். ஆனால் நம்ம தலிவருதான் விவரமில்லாமல் உண்ணாவிரதம் வீராவேச உரை அப்படி இப்படி என்று உடம்பை கெடுத்துகிட்டாரு. ஒழுங்காக வேறு வேலைப்பார்த்திருந்தா அந்த பொம்பளைகிட்ட இருந்து இன்னும் இரண்டு தொகுதியையாவது எக்ஸ்ட்ராவா புடுங்கி இருக்கலாம். அனாவசியமா இப்ப பொன்னுக்கு காபினட் போயிடுச்சி. அதனாலதான் சொல்றேன் நம்ம தலிவருங்க எல்லோரும் இந்தப்பிரச்சினைய இனிமே கண்டுக்காம விட்டுட்டா ரொம்ப நல்லது. ஒரு வகையில அந்த மக்களுக்கு நாம செய்யுற பெரிய உதவி இது. அப்படியே ஏதாவது விளம்பரம் வேனுன்னா அது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்ல. ராமேஸ்வரத்துக்கோ கன்னியாகுமரிக்கோ போய் அகதி முகாம்ல ரெண்டு கிலோ இலவச அரிசியும் ஒரு காந்தித்தாதா நோட்டும் குடுத்து தள்ளி நின்னு போஸ் கொடுத்து ஒரு போட்டோ எடுத்துக்கிட்டா போதும். அதுவும் முடியலயா நம்ம எருமாவளவன் மாதிரி தலிவருங்கள கூட்டிப்போய் ராச பக்சேவுக்கு பட்டு வேட்டியும் அவன் பொண்டாட்டிக்கு பட்டுப்பொடவையும் போத்தி போட்டோ எடுத்துகிட்டாப் போச்சி. அத வச்சியே நம்ம உடன் பிறப்பு அமெரிக்காவுக்கு விடுதலை பெற்றுந்தந்த ஆபிரகாம் லிங்கனே அப்படீன்னு ஊரு புல்லா போஸ்டர் ஒட்டிடுவான். அப்புறம் என்ன அடுத்த எலக்‌ஷன்லேயும் நீங்கதான் சிஎம் (இருந்தீங்கன்னா). அதை விட்டுட்டு இப்படி மவுனமா அழுவுறேன் சத்தம்போட்டு அழுவுறேன் அப்படீன்னு பீலிங்ஸ் படமெல்லாம் எதுக்கு? அப்புறம் இத்தாலி அம்மாவுக்கு கோபம் வந்திடுச்சின்னா திரும்பவும் தாயே குல தெய்வமே அப்படின்னு இன்னொரு பீலிங்ஸ் படம் காட்டனும். இதெல்லாம் தேவையா? அதே மாதிரி ஒத்துமை அது இதுன்னு நாமெல்லாம் உளரக்கூடாது. நமக்கும் ஒத்துமைக்கும் ஒரு காத தூரம் இருக்கும்போது அடுத்தவங்ககிட்ட இந்த பிலிமெல்லாம் ஓட்டக்கூடாது. காவிரி பிரச்சினையில இருந்து பெரியார் அணை பிரச்சினை வரைக்கும் நம்ம தலிவருங்க காட்டுற ஒத்திமை பத்தி சனங்களுக்கு தெரியாதா? அட ஒரு நல்லவன் சாவுக்காவது தலிவருங்க எல்லாம் ஒன்னு சேந்து போயிருக்கமா? நாமப் போயி ஒத்துமையப் பத்திப் பேசினா அவனவன் வாயாலயா சிரிப்பான்? ஈழத்தில் சகோதர சண்டையை மூட்டி வுட்டதே சூனியக்கார ரா அமைப்புதான் என்று சட்டசபையில் நாமே சொல்லிட்டு இப்போது பழியை இளைச்சவன் மீது போட்டா நம்ம சாயம் வெளுத்தராது? நம்ம வீட்டுச் சகோதர சண்டையில அப்பாவி மக்கள் மூனு பேரை உயிரோடு எரிச்சதயெல்லாம் மறந்துட்டு ஈழத்து சகோதர சண்டையில் செத்தவனுக்கெல்லாம் நீலிக்கண்ணீர் விடப்படாது? அப்புறம் என்னைமாதிரி ஆளுக்கேல்லாம் அது மைண்ட்ல ரி எண்ட்ரி ஆகும். நரிக்கூட்டத்தையும் குரங்கு கூட்டத்தையும் ஒன்னா சேத்துகினு போராடியிருந்தால் சுதந்திரம் கிடைத்திருக்குமாம் தலிவரு சொல்றாரு. என்ன பன்றது இதயம் கணிந்து கண்கள் பனிக்கின்ற டெக்னிக்கெல்லாம் ஈழத்து ஆளுங்களுக்கு தெரியாதே. 2005 –ல தேடிவந்த சனநாயக தீர்வை காலால எட்டி உதச்சிட்டாங்களாம். இதையும் தலிவருதான் சொல்றாரு. நமக்குத்தெரியாம அப்படி என்ன தீர்வு வந்திருக்குமோ தெரியல. ஒருவேலை இவரு குடும்பத்துல தென்மாவட்டங்களையும் வடமாவட்டங்களையும் டிப்பார்ண்ட்மெண்ட கண்ட்ரோல்களையும் பிரிச்சிகிட்ட மாதிரி பிரபா குடும்பத்துக்கு வடக்கு மாகானத்தையும் கருணா குடும்பத்துக்கு கிழக்கு மாகானத்தையும் பிரிச்சிக்கோங்க அப்படின்னு சொல்லி இருப்பாங்களோ என்னவோ ? ஆனா நம்ம ஆளுக்குத்தான் விவரம் பத்தாது. நமக்கிருக்கிறது ஒரே பொண்டாட்டி மூனே புள்ளைங்க நமக்கெதுக்கு இதெல்லாம் அப்படீன்னு அருமையான வாய்ப்பை எட்டி உதைச்சிட்டிருப்பாருன்னு நினைக்கிறேன். புடிச்சிருந்தாருண்ணா ஆசியா பணக்காரங்க லிஸ்ட்டுல ஒரு பத்து பதினைஞ்சிலேயாவது வந்திருக்கலாம். கருணாவப் பாருங்க நம்ம தலிவரையே மிஞ்சி ஒரு நாட்டுக்கு ஒரு பொண்டாடின்னு காலத்தை ஜாலியா வாழ்ந்துகிட்டு இருக்காரு. போன ஒரு உயிருக்காக இன்னும் ஊள விடறாரு நம்ம தலிவரு. ஆனா முப்பதாயிரம் நாப்பாதயிரம்னு உயிர்விட்ட ஓலம் மட்டும் தலிவரு காதுல விழவே இல்லயே அது ஏன்னு தெரியல. இந்த நொண்டி சாக்கை சொல்லியே எத்தனை நாள் காலம் தள்ளுவாரோ தெரியல. அந்த சம்பவத்தில் தலிவருக்கு கூட பங்கு இருப்பதாய் இவங்க கூட்டாளிகளே போஸ்டர் கூட ஒட்டினாங்க. ஒரு அம்மாக்கூட ஜெயிலுக்கெல்லாம் போயி கண்ணீர்விட்டு துப்பறிஞ்சுது. ஆனா அதெல்லாம் இப்ப என்ன ஆச்சுன்னு தெரியல. அதுவும் போக அந்த ஒரு சாவுக்குப்பின்னாடி ஓராயிரம் கேள்வி இருந்துச்சாம். பல நாட்டு உளவு அமைப்புகள் இருந்ததா கூட பேசிகிட்டாங்க? அதுகெல்லாம் விடைக்கண்டுபிடிச்சிட்டாங்களான்னு தெரியல. ஒரு வேளை பதில் வெளியில் சொல்லும்படி இல்லையோ என்னவோ? ஒட்டு மொத்த தமிழ் நாட்டையே இவங்க குடுமபத்துக்குத்தான் பட்டா போட்டு கொடுத்தாச்சுன்னு கேள்விப்பட்டேன். அப்புறம் வேறெதுக்கு இன்னும் இப்படி மவுனமா அழுவுறாருன்னு தெரியல. பதினெட்டு கிலோ மீட்டர் தூரத்தில சனங்க தலையில குண்டப் போட்டப்பவே அந்த சத்தம் நம்ம காதுல விழலையே? இவரு மவுனமாக அழுவுறது மட்டும் நமக்கு எப்படிங்க கேக்கும்? வயசான காலத்துல எதுக்கு இதெல்லாம். உடம்புக்கு ஆகாதுன்னு சொல்லுங்க. இறுதிகட்ட போர்ல சண்டப்போட்டு செத்துப்போன பெண் புலிங்க உடல கற்பழிச்சி வெறியை தீர்த்துக்கிட்டானுங்களாம் சிங்களவனுங்க. அந்த அனிமல்சுக்கும் குத்துயிரும் குலயுருமா கிடக்கிற சனங்களோட பிரச்சினைகள பார்க்காம அதிலயும் நுன்னரசியல் பண்ணி இன்னும் லாபம் தேடுற உங்க தலிவருங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசமுன்னு கேக்குறான் நம்ம கூட்டாளி. என்ன சொல்றதுன்னு தெரியல எனக்கு. அது சரி அதெல்லாம் விடுங்க. நம்ம கலா அக்கா மானையும் மயிலையும் வச்சி கெமிஸ்ட்ரி பாடம் நடத்துறாங்களாம் அத போய் பார்ப்போம் முதல்ல. .

5 comments:

vasu balaji said...

முட்டு சந்தில ஓட விட்டு அடிச்சா மாதிரி அப்பூடி ஒரு அடி தலீவா. தேர்தல் வரட்டும். வெக்கம் மானம் இல்லாம இத வெச்சி பிசினஸ் பாப்பானுங்கோ. எங்க தல எழுத்து இந்த நரகத்துல சாவாம சாவணும்.

தமிழ் நாடன் said...

வாங்க வானம்பாடி அண்ணே! தமிழ்நாட்டுக்காரன் அப்படீன்னு சொன்னாலே கொல வெறியோட பாக்கறாங்கண்ணே! நாக்க புடிங்கி சாவறமாதிரி கேக்குறாங்கண்ணே! உங்களுக்கு இருக்கற பீலிங்ஸ் எனக்கும் இருக்கறதுனாலதான் இப்படியெல்லாம் எழுத வேண்டியிருக்கு!

ஹேமா said...

யார் காதில இதெல்லாம் சொல்லிச் சங்கு ஊதறீங்க !எல்லாரும் செவிடாகிக் குருடாகி ஊமையாகி ரொம்ப நாளாச்சு !

ஹேமா said...

ஈழத்தமிழனுக்கு அகதித்தமிழன்,
பரதேசித் தமிழன்ன்னு இன்னும் நிறையப் பேர் இருக்கு.தமிழ் நாட்டு அகராதியில் இனி வரும் பதிப்பில் வரும்.

யாசவி said...

// அப்படீன்னு ஊரு புல்லா போஸ்டர் ஒட்டிடுவான். அப்புறம் என்ன அடுத்த எலக்‌ஷன்லேயும் நீங்கதான் சிஎம் (இருந்தீங்கன்னா).//

y these words?

Are you still reading all these __________?

please do some other work which u/v have.

Anyway the flow and wordings are so nice to read.

ur this article is eligible for come under main stream media.

Keep going