ஒரு கோடை விடுமுறை நாளில் அம்மாவும் நானும் பரணையில் வெகுநாட்களாக தூங்கிக்கொண்டிருந்த நோட்டு புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் சுத்தம் செய்யலாம் என்று களத்தில் இறங்கினோம். அம்மா ஒரு துண்டு சீட்டைக்கூட விடமாட்டார்கள். எதையும் தூக்கித் தூரப்போட அம்மாவுக்கு மனசு வராது. அப்படியே சேர்த்து சேர்த்து அன்று வரை முழு பரணையும் வெறும் காகித மேடாக நிறைந்து கிடந்தது. எதையும் அப்படியே தூக்கி போடாது ஒவ்வொன்றையும் படித்துக் காட்டிய பிறகே அம்மா தூக்கிப்போட சம்மதித்தார்கள். அதுவும் அரைகுறை மனதோடு. அப்போது 1976 ஆம் ஆண்டு நாட்குறிப்பு ஒன்று கையில் கிடைத்து. அது என் பெரிய அக்காவுடையது. முழுக்க முழுக்க பாரதியார் பாடல்கள் சீவக சிந்தாமணி என்று எதை எதையோ எழுதியிருந்தது. இடையிடையே ஒன்று இரண்டு மூன்று என்று பட்டியலிட்டு எனது மற்ற அக்காக்கள் பெயருக்கு கீழே ஏதோ எழுதியிருந்தது. ஆர்வம் மேலிட மேலே படித்தேன். அது அவர்களுக்கான அன்றாட வேலைகள். அந்த வருடங்களில் அப்பாவுக்கு சுகமில்லாமல் போனதால் அடிக்கடி வைத்தியம் பார்க்க அம்மா அவரை கூட்டிக்கொண்டு சென்னைக்கு போய்விடுவார்களாம். அப்போதெல்லாம் எங்கள் பெரிய அக்காதான் எங்கள் ஐவரையும் பார்த்துகொள்ளுமாம் ஒரு வகுப்பு தலைவி மாதிரி. ஒவ்வொரு நாளும் யார் யார் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்று அந்த நாட்குறிப்பில் எழுதிவைக்கும். அதன்படிதான் எல்லோரும் நடக்கவேண்டுமாம். எல்லா அக்காவுக்கும் ஒவ்வொருநாளும் வேறு வேறு வேலைகள் எழுதியிருந்தது. ஆனால் ஒரு அக்காவுக்கு மட்டும் தினமும் ஒரே வேலை எழுதியிருந்தது இவ்வாறு.
Wednesday, 30 September 2009
வரம் கொடு தேவதையே ! தொடர்பதிவு !
ஒரு கோடை விடுமுறை நாளில் அம்மாவும் நானும் பரணையில் வெகுநாட்களாக தூங்கிக்கொண்டிருந்த நோட்டு புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் சுத்தம் செய்யலாம் என்று களத்தில் இறங்கினோம். அம்மா ஒரு துண்டு சீட்டைக்கூட விடமாட்டார்கள். எதையும் தூக்கித் தூரப்போட அம்மாவுக்கு மனசு வராது. அப்படியே சேர்த்து சேர்த்து அன்று வரை முழு பரணையும் வெறும் காகித மேடாக நிறைந்து கிடந்தது. எதையும் அப்படியே தூக்கி போடாது ஒவ்வொன்றையும் படித்துக் காட்டிய பிறகே அம்மா தூக்கிப்போட சம்மதித்தார்கள். அதுவும் அரைகுறை மனதோடு. அப்போது 1976 ஆம் ஆண்டு நாட்குறிப்பு ஒன்று கையில் கிடைத்து. அது என் பெரிய அக்காவுடையது. முழுக்க முழுக்க பாரதியார் பாடல்கள் சீவக சிந்தாமணி என்று எதை எதையோ எழுதியிருந்தது. இடையிடையே ஒன்று இரண்டு மூன்று என்று பட்டியலிட்டு எனது மற்ற அக்காக்கள் பெயருக்கு கீழே ஏதோ எழுதியிருந்தது. ஆர்வம் மேலிட மேலே படித்தேன். அது அவர்களுக்கான அன்றாட வேலைகள். அந்த வருடங்களில் அப்பாவுக்கு சுகமில்லாமல் போனதால் அடிக்கடி வைத்தியம் பார்க்க அம்மா அவரை கூட்டிக்கொண்டு சென்னைக்கு போய்விடுவார்களாம். அப்போதெல்லாம் எங்கள் பெரிய அக்காதான் எங்கள் ஐவரையும் பார்த்துகொள்ளுமாம் ஒரு வகுப்பு தலைவி மாதிரி. ஒவ்வொரு நாளும் யார் யார் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்று அந்த நாட்குறிப்பில் எழுதிவைக்கும். அதன்படிதான் எல்லோரும் நடக்கவேண்டுமாம். எல்லா அக்காவுக்கும் ஒவ்வொருநாளும் வேறு வேறு வேலைகள் எழுதியிருந்தது. ஆனால் ஒரு அக்காவுக்கு மட்டும் தினமும் ஒரே வேலை எழுதியிருந்தது இவ்வாறு.
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
சீக்கிரம் எழுதுகிறேன் நண்பரே
அழைப்புக்கு நன்றி.
அம்பிகா அக்காவை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது
:(
நன்றி யாசவி!
//இதோ பா.ரா அனுப்பிய தேவதை என் வீட்டு வாசலில்! நான் கேட்க போகும் ஒரே வரம் ”எங்கள் வீட்டு தேவதையை திருப்பித்தா” என்றுதான்!//
மிக வலி மிகுந்த அனுபவ இடுகை....எல்லாம் படித்து முடிக்கையில் கண்களில் முட்டும் நீரினை கட்டுப்படுத்த முடியவில்லை. அனுபவங்களை பகிரும்போது நம் பாரங்கள் கொஞ்சமாவது குறையும். உங்களுக்கும் அதேபோல் குறைந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.
நீங்கள் கேட்ட வரம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்..
ஆமாம் பாலாஜி!
நான் திரும்பவும் நினைத்துக்கூட பார்க்க முடியாத வலி அது.
வருகைக்கு நன்றி!
படித்து முடித்ததும் நெஞ்சில் ஏற்பட்ட வலி அளப்பரியது தோழரே. உங்கள் சொந்த அனுபவத்தை நாங்களும் உணர்கிற , உங்களின் இடத்தில் எம்மை வைத்துப் பார்க்கிற சூழலைத் தந்தது உங்கள் அம்பிகா அக்காவின் சோகக் கதை.
அம்பிகா அக்காவை இயற்கை திருப்பித் தராது என்றாலும் கூட அவரது நினைவுகளை யாரும் உங்களிடமிருந்து பறித்துவிட இயலாது.
என்னையும் இந்தப் பதிவிற்கு அழைத்ததற்கு நன்றி.
கடுமையான பணியாலும் , வேலை நிமித்தமும் அழுத்திக்கொண்டிருப்பதால் வலையிலும் கூட தொடர்ச்சியாக எழுத முடிவதில்லை. இருந்தாலும் அன்பு நண்பரின் பாசமான அழைப்பிற்கு மிகுந்த நன்றிகளைச் சொல்லிக்கொண்டு இந்தப் பதிவினை எழுதப்போகிறேன்.
தாமதமானால் மன்னிக்கவும்.
:)))
நன்றி , நன்றி , நன்றி...!
என் வலியை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பர் மதிபாலா!
உங்களால் எப்போது முடியுமோ அப்பொழுது எழுதுங்கள். என் அழைப்பை அன்போடு ஏற்றதற்கு நன்றி!
படித்து முடிக்கையில் கண்ணில் வழியும் நீரை கட்டுப்படுத்த முடியவில்லை. கடவுள் மீதான கோபம் தவிர ஏதுமில்லை என்னிடம்.
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி அமிர்தம் !
தொடர் இடுகை!
//பழமைபேசி said...
தொடர் இடுகை!//
திருத்திக்கொள்கிறேன் அண்ணே!
கலங்க வைத்துவிட்டீர்கள்.
வருகைக்கு நன்றி வானம்பாடிகள் !
வேலையாக வெளியூர் வந்திருக்கேன் தமிழ்நாடன்.அதான் தாமதம் இங்கு வர.மனசுகனத்து,கண்கள் நிறைந்து போகிறேன் மக்கா.அக்கா,ஆத்மா சாந்தி அடையட்டும்.
நன்றி பா.ரா அண்ணே!
நீங்க எப்ப வந்தாலும் ஓ.கே தான்.
அருமை நண்பரே அருமை!
உங்களை போன்ற நண்பரை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது.எனக்கு இது போல் எழுத வரவில்லையே என்று!
தொடருங்கள் உங்கள் படைப்பை!
மிக்க நன்றி பொன்கார்த்திக்! நெசமாவா சொல்றீங்க!
இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது??!!! ))):-
Post a Comment