எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Wednesday 24 December 2008

மின்னும் சகார்த்தா! ( ஒளிப்படங்கள்)

இந்தோனேசியாவை முன்பெல்லாம் எல்லோரும் ஏழை நாடு என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றோ படிப்படியாக முன்னேறி வளரும் நாடுகள் வரிசையில் இடம் பிடித்து விட்டது. எது எப்படியோ என்னை பொறுத்தவரை இது ஒரு வளமான நாடு. ஏனென்றால் அவ்வளவு இயற்கை வளத்தையும் அழகையும் கொண்டுள்ளது இந்த நாடு. கீழே இருக்கும் படங்களை பார்த்தால் உங்களுக்கு இது ஏழை நாடாகவா தெரிகிறது? இப்போது இந்நாட்டின் தலைநகர் சகார்த்தாவின் அழகை கண்டுகளியுங்கள். படத்தை பெரிதாக்க படத்தின் மீது சுட்டுங்கள். மேலே படத்தில் உள்ளது சகார்த்தாவின் மையப்பகுதியி அமைந்துள்ள” மோனாஸ்” என்று அழைக்கப்படும் தேசிய நினைவுச்சின்னம். இது முந்தைய சாவா இந்துக்களின் லிங்க-யோனி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இதின் உச்சியில் 35 கிலோ தங்கத்தை கொண்டு அடர்த்தியான முலாம் பூசப்பட்ட தீச்சுடர் வடிவ கும்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1961 -ல் அதிபர் சுகர்னோவால் ஆரம்பிக்கப்பட்டு 1975-ல் அதிபர் சுகார்த்தாவால் கட்டிமுடிக்கப்பட்டது. மோனாஸ் கோபுரம் மற்றுமொரு கோனத்தில். நீங்கள் மேலே பார்ப்பது சகார்த்தாவின் மையப்பகுதி. இந்த பகுதியில்தான் சகார்த்தாவின் முக்கிய நட்சத்திர விடுதிகளும் மிகப்பெரிய விற்பனை வளாகங்களும் உள்ளன.கீழே உள்ளது அதே மையப்பகுதின் மறு பகுதி இரவில் மின்னொளியில் மின்னும் காட்சி. இதில் பின்புலத்தில் தெரிவது நல்வரவு சிலை (துகு செலாமத் தத்தாங்). ஒரு சிறுவனும் சிறுமியும் கையைதூக்கி வரவேற்பது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழே இருப்பவை அனைத்தும் சகார்த்தாவின் அழகிய சாலைகள் இரவில் மின்னொளியில் மின்னும் காட்சிகள். சகார்த்தாவின் சாலைகள் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கும். இரவு நேர சகார்த்தா இன்னும் அழகாக இருக்கும். சகார்த்தாவின் இரவுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இனிமையானவை.

6 comments:

இப்னு ஹம்துன் said...

படங்கள் அருமை.

யாசவி said...

last time stay near the fountain.

But is it seems more polluted?

sorry for english

Anonymous said...

What a great web log. I spend hours on the net reading blogs, about tons of various subjects. I have to first of all give praise to whoever created your theme and second of all to you for writing what i can only describe as an fabulous article. I honestly believe there is a skill to writing articles that only very few posses and honestly you got it. The combining of demonstrative and upper-class content is by all odds super rare with the astronomic amount of blogs on the cyberspace.

Anonymous said...

Hello My name is ReraCakibra and I really want to know how interesting this forum is . So, I onlyneed to know : how long should i wait before I'll get an answer to my questions.
Thanks

தமிழ் நாடன் said...

நன்றி அனானி!

தமிழ் நாடன் said...

திரு ரேரா சாக்கிபெரா, உங்களிடமிருந்து எந்த கேள்வியும் வந்து சேரவில்லை. உங்களுக்கு ஏதாவது தகவல் வேண்டின் என்னுடைய
மின்னஞ்சலுக்கு எழுதவும்.