எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Wednesday 29 April 2009

உண்ணாநிலை அறப்போராட்டத்தில் கலந்துகொள்வீர் !

உலகளவில் தனி ஈழ விடுதலை வேண்டி நமது உறவுகள் பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் இவ் வேளையில் தமிழ்நாட்டில் உள்ள ஈழத்து உறவுகளும் தமது போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். இதன்படி எதிர்வரும் 30.04.2009 அன்று சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திரு பழ. நெடுமாறன் அவர்களின் தலைமையில் பட்டினிப் போராட்டம் நடைபெற இருக்கின்றது. இதற்கு மேலும் வலு சேர்ப்பதற்காக வெளிநாட்டில் உள்ள நமது உறவுகள் இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பெருமளவு அணிதிரண்டு ஒத்துழைப்பு வழங்குவதற்குமான செய்தியை பரிமாறி இப்போராட்டத்திற்கு ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

No comments: